ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் அரையிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தியா சார்பாக பி.வி.சிந்து, சாய்னா நேவால் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர்.
அதில் முதல் அரையிறுதியில் பங்கேற்ற சாய்னா தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவருக்கு வெண்கலம் மட்டுமே கிடைத்தது. அரையிறுதியில் சீன தைபெய்-இன் டாய் சூயிங்-ஐ எதிர்கொண்டார்.
அந்த போட்டியில் 21-17, 21-14 சூயிங் வென்றார். 36 நிமிடங்களே நடைபெற்ற இந்த போட்டியில் சாய்னா தோல்வி அடைந்தார். இதனால், காலிறுதி வெற்றி மூலம் உறுதியான வெண்கலம் கிடைத்தது.
இந்தியாவுக்கு இது 37வது பதக்கமாகும். மேலும், பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் 36 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் முதல் பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து பி.வி.சிந்து அரையிறுதியில் பங்கேற்க உள்ளார். அவர் ஜப்பானின் அகானே யாமாகுச்சி-ஐ சந்திக்கிறார். இந்த போட்டியில் சிந்து வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.