டெல்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் போட்டியில் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பை நடப்பு சாம்பியன் பிவி சிந்து இழந்தார். வெள்ளிப் பதக்கத்துடன் அவர் ஆறுதல் அடைந்தார்.
இந்தியன் ஓபன் பாட்மின்டன் போட்டிகள் டெல்லியில் நடந்தது. இதில் முன்னாள் சாம்பியன் சாய்னா நெஹ்வால், எச்.எஸ். பிரனாய், முன்னாள் சாம்பியன் கிடாம்பி ஸ்ரீகாந்த், கஷ்யப், பி. சாய் பிரனீத், சமீர் வர்மா என முன்னணி வீரர்கள் அனைவரும் தோல்வியடைந்து வெளியேற ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக பிவி சிந்து பைனல் வரை முன்னேறினார்.