டெல்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் பி.வி. சிந்து, முன்னாள் சாம்பியன் சாய்னா நெஹ்வால் முன்னேறினர். அதே நேரத்தில் முன்னாள் சாம்பியனான கிடாம்பி ஸ்ரீகாந்த் வெளியேறினார்.
உலக பாட்மின்டன் கூட்டமைப்பின் உலகச் சுற்று போட்டிகளில் ஒன்றான இந்திய ஓபன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.