பாரிஸ்: சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் போட்டியான பிரெஞ்ச் ஓபன் போட்டியின் அரை இறுதியில் எச்.எஸ். பிரனாயின் கடுமையான சவாலை வென்று இறுதிக்கு முன்னேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பி.வி. சிந்து, வெளியேறினார்.
சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் பாரிஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில் நேற்று இரவு நடந்த அரை இறுதிப் போட்டியில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தும், எச்.எஸ்.பிரனாயும் மோதினர். மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், கோபிசந்த் அகாதெமியின் மாணவர்களான இருவரும் குருவின் பெருமையை நிலைநாட்டும் வகையில் அபாரமாக விளையாடினர்.