பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டுக் கழகத்தில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் தேர்வு போட்டிகள் நடந்தன. அதில் விஜேந்தர் கலந்து கொள்ளவில்லை, தவிர்த்து விட்டார். இதனால் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.
இதுகுறித்து இந்திய குத்துச் சண்டைக் கழகத்தின் தலைவர் அபிஷேக் மடோரியா கூறுகையில், விஜேந்தர் தகுதிப் போட்டிகளுக்கு வரவில்லை. இதனால் அவர் சைப்ரஸ், கியூபா போட்டிகளில் பங்கேற்க முடியாது. அணியில் அவர் சேர்க்கப்படவில்லை என்றார்.
இருப்பினும் அக்டோபர் 4 முதல் 13ம் தேதி வரை கஸகஸ்தானில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.