30 நாடுகளின் 250 வீரர்கள் பங்கேற்பு
பல்கேரியாவின் சோபியாவில் நடைபெற்றுவரும் ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை போட்டியில் உலகெங்கிலும் இருந்து 30 நாடுகளை சேர்ந்த 250 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
காலிறுதிக்கு முன்னேறிய வீரர்கள்
இந்த குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியாவின் நிகாத் ஜரீன், சிவ தாபா மற்றும் துர்யோதன் சிங் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
கவனத்தை பெற்றுள்ள சிவ தாபா
ஆசிய போட்டிகளில் 4 முறை தங்கம் வென்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தாபா, போலந்தின் பாவெல் போலகோவிக்கை 5க்கு 0 என்ற செட் கணக்கில் வெற்றி கொண்டு காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நிகாத் ஜரீனும் காலிறுதிக்கு முன்னேற்றம்
இதேபோல 51 கிலோ பிரிவு போட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் மற்றும் 69 கிலோ பிரிவில் துர்யோதன் சிங் நேகி ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
முதல் சுற்றிலேயே வெளியேற்றம்
இதனிடையே, தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்ற அங்கித் கதானா, வெள்ளி வென்ற தீபக் குமார், நரேந்தர் மற்றும் நவீன்குமார் ஆகிய வீரர்களும் நுபூர் மற்றும் லலிதா ஆகிய வீராங்கனைகளும் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளனர்.