பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியா ஆடி வருகிறது.
இந்த இன்னிங்சில் டெஸ்ட் போட்டிகளில் தனது 1000வது ரன்களை ரிஷப் பந்த் பூர்த்தி செய்துள்ளார்.
விக்கெட் கீப்பராக இந்த சாதனையை விரைவாக மேற்கொண்டவர் என்ற சிறப்பை இதன்மூலம் பந்த் பெற்றுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இன்றுடன் ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பவுள்ளனர் இந்திய வீரர்கள்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிவரும் ரிஷப் பந்த், இன்றைய ஆட்டத்தின்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை அதிவிரைவாக பூர்த்தி செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை புரிந்துள்ளார். இதன் சராசரியாக 40.04 உள்ளது. இதில் அதிகபட்ச ரன்களை வெளிநாடுகளில் விளையாடிய போட்டிகளில் அவர் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.