பிரார்த்தனை
இந்திய அணி வெற்றி பெற வேண்டி ஷமியின் வீட்டில் 11 மவ்லவிகள் குர்ஆன் ஓதி வருகிறார்கள். மேலும் கிரமாத்தில் உள்ள 4 மசூதிகளிலும் டோணி தலைமையிலான அணியின் வெற்றிக்காக சிறப்பு தொழுகை நடத்தப்படுகிறது.
11 வீரர்கள்
இந்திய அணியின் 11 வீரர்களுக்காக 11 மவ்லவிகள் குர்ஆன் ஓதி பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்று ஷமியின் தந்தை தவ்சீப் தெரிவித்துள்ளார்.
மசூதிகள்
ஷமி மட்டும் அல்ல இந்திய அணியில் அனைவரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று தான் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது என்கிறார்கள் கிராமத்தினர்..
விருந்து
இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவ்சீப்.
பாட்டி
ஷமியின் பாட்டி புதன்கிழமை முழுவதும் தொழுது இந்திய அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.