இந்தியா அபாரம்
டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் ரோகித் சர்மாவின் அதிரடி சதம், ரஹானே மற்றும் ரிஷப் பண்ட்-ன் சிறப்பான அரை சதத்தால் 329 ரன்களை குவித்தது.
திணறல்
இதனைதொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி அஸ்வினின் சுழலில் சிக்கி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆட்டத்தின் முதல் பந்து முதலே நல்ல ஸ்விங்க் இருந்ததால் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் ரன் குவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டார்.
மேலும் ஒரு சாதனை
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை முந்தி அஸ்வின் ( 266 விக்கெட்) 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 350 விக்கெட்டுடன் முதலிடத்தில் அனில் கும்ளே உள்ளார். ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டுடன் 3வது இடத்தில் உள்ளார்.
பரிதாப நிலை
சென்னை ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமானதாக உள்ளதால் இந்திய அணியும் 2வது இன்னிங்சில் திணறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியா 242 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் இங்கிலாந்து அணி கடுமையாக போராட வேண்டிய சூழலில் உள்ளது.