For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணி செய்த 3 தவறு.. குறைகளை எல்லாம் சரி செய்வாரா ரோகித்.. டி20 உலககோப்பை கவுண்டவுன் தொடங்கியது

இந்தூர் : டி20 உலககோப்பை இன்னும் சரியாக 11 நாட்களில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டமான பாகிஸ்தானை எதிர்கொள்ள சரியாக 18 நாட்கள் இருக்கிறது.

இந்த நிலையில், அதற்கு முன் விளையாடிய கடைசி ஆட்டத்தில் இந்தியா தோற்றது.இது உத்வேகம் ரீதியாக குறையாக பார்க்கட்டாலும், இந்த தோல்வியின் மூலம் பாடம் கற்று கொண்டால், இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

முதலில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா 49 ரன்கள் வித்தயாசத்தில் தோல்வியை தழுவினாலும் இந்தியா செய்த தவறுகளை பார்க்கலாம்.

இப்படியா ஃபில்டிங் செய்வீங்க ? டி20 உலககோப்பைக்கு முன் கடைசி போட்டி.. இந்திய அணி தோல்விஇப்படியா ஃபில்டிங் செய்வீங்க ? டி20 உலககோப்பைக்கு முன் கடைசி போட்டி.. இந்திய அணி தோல்வி

எதுக்கு ராகுலுக்கு ஓய்வு

எதுக்கு ராகுலுக்கு ஓய்வு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி தொடர்ந்து ஓய்வின்றி விளையாடி வரும் சூர்யகுமாருக்கு தான் ஓய்வு கொடுத்தி இருக்க வேண்டும். ஆனால் ராகுலுக்கு ஓய்வு வழங்கி இருக்கிறார்கள். தொடர்ந்து விளையாடி வந்த சோர்வு நேற்று சூர்யாவின் பேட்டிங்கை பாதித்தது. ஆனால் ராகுல், இப்போது தான் ஃபார்ம்க்கு திரும்பினார் பிறகு எதற்கு ஓய்வு.

ரோகித் தவறு

ரோகித் தவறு

ரோகித் சர்மா நடப்பு தொடரில் மட்டும் 2 முறை டக் அவுட்டாகி இருக்கிறார். நேற்று இந்திய அணி 5 முழு நேர பேட்ஸ்மேனை வைத்து மட்டுமே விளையாடியது. இதனால் ரோகித் போன்ற அனுபவ வீரர் ஒருவர் நேற்று இன்னிங்ஸ் முழுவதும் விளையாடி இருக்க வேண்டும்.குறைந்தபட்சம் ஒரு அளவுக்காவது நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்கலாம்.

ஃபில்டிங் தவறு

ஃபில்டிங் தவறு

இந்திய அணியின் ஃபில்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. முகமது சிராஜ் நேற்று 2 கேட்சை மட்டும் விடாமல், அதனை சிக்சர்களுக்கு விட்டார். ஸ்ரேயாஸ் ஐயரை தவிர மற்ற வீரர்கள் யாரும் ஃபில்டிங்கில் கருத்தாக இல்லை இதே போன்று நேற்று அஸ்வின் 4 ஓவர் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். அக்சர் பட்டேலுக்கு ஒரு ஓவர் மட்டுமே வழங்கப்பட்டது.

அக்சருக்கு ஒரு ஓவர்?

அக்சருக்கு ஒரு ஓவர்?

இதனால் வேகப்பந்துவீச்சாளர் யாருக்காவது ஒரு 2 ஓவரை குறைத்துவிட்டு அக்சர் பட்டேலை தொடக்கத்தில, இல்லை இன்னிங்ஸ் நடுவே பயன்படுத்தி ரன்களை கட்டுப்படுத்தி இருக்கலாம். இந்த தவறை ரோகித் சர்மா ஏன் தெரிந்தே செய்தார் என்று தெரியவில்லை. டி20 உலககோப்பை முன் இந்தியா தனது டேத் ஓவர் பவுலரை கண்டபிடிக்க வேண்டும். இல்லை என்றால், இம்முறை நமக்கு கோப்பை கிடைப்பது கஷ்டமே.

Story first published: Wednesday, October 5, 2022, 7:00 [IST]
Other articles published on Oct 5, 2022
English summary
3 Biggest Mistake by india ahead of t20 world cup 2022 இந்திய அணி செய்த 3 தவறு.. குறைகளை எல்லாம் சரி செய்வாரா ரோகித்.. டி20 உலககோப்பை கவுண்டவுன் தொடங்கியது
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X