இலங்கை சொதப்பியது
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பவுலிங் அபாரமாக இருந்தது. இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். இஷாந்த் சர்மா, ஜடேஜா இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்தியா பேட்டிங் மாஸ்
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதன்பின் களம் இறங்கிய இந்தியா அணி பேட்டிங்கிலும் மாஸ் காட்டியது. முதல்நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு இந்தியா 11 ரன்கள் எடுத்து இருந்தது. எங்கு இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பிவிடுமோ என்று நினைத்த போது முரளி விஜய் மற்றும் புஜாரா ஜோடி கைகோர்த்து சிறப்பாக ஆடியது.
மூன்று செஞ்சுரி
நேற்று முழுக்க போட்டியை முரளி விஜய் மற்றும் புஜாரா ஜோடி தங்கள் வசம் வைத்து இருந்தனர். முரளி விஜய் அதிரடியாக ஆடி 128 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முரளி விஜய்க்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்த புஜாரா 143 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரோஹித் சர்மாவும் மிகவும் சிறப்பாக ஆடி 160 பந்துகளில் செஞ்சுரி அடித்தார். ஒரே போட்டியில் மூன்று பேட்ஸ்மேன்கள் செஞ்சுரி அடித்தனர்.
|
கோஹ்லியின் இரட்டை சதம்
இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து கோஹ்லி மிகவும் சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடி முதலில் செஞ்சுரி அடித்தார். ஆனால் பசி அடங்காத சிங்கம் போல அதிரடியை மேலும் தொடர்ந்து 200 ரன்களை அடைந்தார். மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி 260 பந்துகளில் இரட்டை சதம் அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இது கோஹ்லியின் 5வது இரட்டை சதம் ஆகும். 213 ரன்கள் எடுத்து இருந்த போது கோஹ்லி அவுட் ஆனார்.
மிகப்பெரிய இலக்கு
இந்த நிலையில் இந்திய அணி வீரர்களின் அதிரடியால் இந்தியா 610 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் டிக்ளேர் செய்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும். இலங்கை இந்தியாவை விட 384 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. மூன்றாவது நாள் முடிவில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்களுடன் களத்தில் இருக்கிறது.