நிதான ஆட்டம்
அதன்பின்னர், 167 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது டெல்லி அணி. தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும் தவான் நிதானமாக விளையாடினார்.
61 ரன்கள்
அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 61 ரன்களை குவித்தது. 16.4 ஓவரில் 144 ரன்கள் எடுத்திருந்த போது டெல்லி அணியின் ரிஷப் பண்ட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
டெல்லி ஆல் அவுட்
அதன்பிறகு களத்துக்கு வந்த டெல்லி வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் டெல்லி அணி பறிகொடுத்தது.
வெற்றியை இழந்தது
இதனையடுத்து, பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற வேண்டிய மேட்ச்சை அழகாக கோட்டைவிட்டது டெல்லி அணி. அந்த அணியில் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
5 பேர் டக் அவுட்
டெல்லி அணியின் பிரித்விஷா, கிறிஸ் மோரிஸ், ஹர்சல் படேல், ரபாடா, லாமிசேன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணியில் ரன் ஏதும் எடுக்காமல் அதிக வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தவர்கள் பட்டியலில் டெல்லி அணி இடம் பிடித்திருக்கிறது.
இதுவும் ஒரு சாதனை
முன்னதாக 2011ம் ஆண்டு மும்பை அணியுடனான போட்டியில் இதே போன்றதொரு சாதனைபடைக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது தான்...டெல்லி அணி வீரர்கள் 5 பேர் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்திருந்தனர்.
எந்த அணிகள்
ரன் ஏதும் எடுக்காமல் அதிக விக்கெட்டை பறிகொடுத்த அணிகள்
ஆண்டு | அணி | விக்கெட்டுகள் | எதிரணி |
---|---|---|---|
2011 | கொச்சி | 6 | ஹைதராபாத் |
2011 | டெல்லி | 5 | மும்பை |
2008 | பெங்களூரு | 5 | பஞ்சாப் |
2019 | டெல்லி | 5 | பஞ்சாப் |