10க்கும் மேற்பட்டோர் பலி
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை முதல் காட்டுத்தீ பற்றியுள்ள நிலையில், இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
குடியிருப்புவாசிகள் பரிதவிப்பு
இந்தக் காட்டுத்தீயில் சிக்கி 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் வீடு மற்றும் உடமைகளை இழந்து ஆயிரக்கணக்கானோர் வாடி வருகின்றனர்.
பயிற்சியாளர் லாங்கர் வருத்தம்
இந்த காட்டுத்தீயில் தன்னுடைய வீட்டை இழந்து 80 வயது முதியவர் பில் டீன் பரிதவித்து வருகிறார். வீல் சேரில் வாசம் செய்யும் இவருக்காக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜஸ்டின் லாங்கரின் செயல்பாடு
முதியவர் பில் டீனுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தன்னுடைய பயிற்சி கேப்பை பரிசளித்துள்ளார். இந்த செயல்பாடு அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
முதியவர் பில் டீன் நன்றி
ஜஸ்டின் லாங்கரின் இந்த பரிசு காட்டுத்தீயால் பரிதவித்துவரும் தன்னுடைய ஆயுளை கூட்டியுள்ளதாக அந்த முதியவர் பில் டீன் நன்றி தெரிவித்துள்ளார்.
பில் டீன் பாராட்டு
குழந்தையோ அல்லது முதியவரோ, அவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்க இத்தகைய செயல்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருவது குறித்தும் டீன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
|
டெஸ்ட் போட்டி நடைபெறுமா?
சிட்னியில் காட்டுத்தீயால் காற்றின் தரம் குறைந்துள்ள நிலையில், நாளை துவங்கவுள்ள நியூசிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஜஸ்டின் லாங்கர் கோரிக்கை
இதனிடையே, காற்றின் தரம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அந்தப்பகுதியில் மழை பெய்ய வேண்டும் என்றும் அதுவும் போட்டிக்கு இடையூறு இல்லாமல் இரவு நேரங்களில் பெய்ய வேண்டும் என்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். சிட்னிக்கு இதுதான் முதல் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.