மழையின் மிரட்டல்
ஆனால்... கடந்த சில நாட்களாக நாட்டிங்ஹாம் பகுதியில் மழை மிரட்டி வந்தது. ஜோவென்று பெய்யும் மழையால் வீரர்களின் பயிற்சி ஆட்டமும் பாதிக்கப் பட்டது. காதலியின் முடிவு என்ன என்பதை ஆர்வமுடன் எதிர்பார்க்கும் காதலன் முடிவு, வானிலை மைய தகவலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
வானிலை நிலவரம் என்ன?
யார் எதிர்பார்க்கிறார்களோ... இல்லையோ... ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இங்கிலாந்தின் வானிலை நிலவரம் என்ன என்பதை தேடி பிடித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். அவர்களின் ஆர்வத்துக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது.
போட்டி குறித்து சந்தேகம்?
போட்டி நடைபெறும் நாட்டிங்ஹாம் பகுதியில் வியாழக்கிழமை மதியம் வரை கிட்டத் தட்ட 70 சதவீதம் வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை மையம் கூறியிருந்தது. அதனால் போட்டிக்கு 80 சதவீதம் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று எதிர்பார்க்கப்பட்டது.
மழை நின்றுவிட்டது
ஆனால்.. தற்போது மழை காலை முதல் இல்லை, நின்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 4 நாட்களாக மிரட்டிய மழை தற்போது இல்லை. அப்படியே இருந்தாலும் 40 சதவீதம் வரையே மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி உறுதி
ஆனால் அந்த மழையும் மதியத்துக்குள் நின்றுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்தியா, நியூசி. போட்டி நடைபெறுவது உறுதி ஆகி விட்டது. ரசிகர்களுக்கும் இந்த செய்தி சென்றுசேர்ந்து விட்ட படியால் ஏகத்துக்கும் குஷியாகி இருக்கின்றனர். பின்ன...? 16 ஆண்டுகள் கழித்து இந்தியா, நியூசி. அணிகள் மோதுகின்றன என்பது சும்மாவா.. என்ன...?