ஸ்பின்னர்களின் தோல்வி
இந்தியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் சோபித்தது போன்று 50 ஓவர் போட்டியில் அஸ்வினால் கம்பேக் கொடுக்க முடியவில்லை. அவருக்கு உறுதுணையாக வந்த சாஹல் மற்றும் ஜெயந்த் யாதவும் கைக்கொடுக்கவில்லை.
அஸ்வின் வேண்டாம்
இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, ஒருநாள் போட்டித்தொடரில் அஸ்வின் - சஹால் ஆகியோர் சேர்ந்தே மூன்று போட்டிகளில் வெறும் 3 விக்கெட்டுகள் தான் எடுத்துள்ளனர். ஜெயந்த் யாதவும் பெரிதாக ஏதும் செய்யவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் இனி ஒருநாள் கிரிக்கெட்டிற்கு சரிபட்டு வரமாட்டார்கள்.
மாற்று வீரர்கள் யார்
இந்திய அணிக்கு மீண்டும் குல்தீப் யாதவ் - யுவேந்திர சாஹல் ஜோடியை கொண்டு வர வேண்டும். எதிரணி ஸ்பின்னர்கள் ஒரு போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆனால் நமது ஸ்பின்னர்கள் மொத்த தொடரிலேயே 3 விக்கெட்டுகள் தான் எடுத்தனர். எனவே அஸ்வின் - ஜெய்ந்தை நிக்கிவிட்டு, மாற்று வீரர்களை களமிறக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு நன்மை
ஜடேஜாவின் இடத்தை குல்தீப் யாதவ் நிரப்புவார். மிடில் ஓவர்களில் இந்திய ஸ்பின்னர்களால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும். 10 ஓவர்களில் 70 ரன்களை கூட கொடுக்கலாம். ஆனால் அதில் 3 விக்கெட்டுகளையாவது எடுத்திருந்தால் தான் அது அணிக்கு நன்மையாக இருக்கும் என கூறியுள்ளார்.