மிரட்டலான பந்துவீச்சு
தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ரோஹித் சர்மா மற்றும் ராயுடு ஆகியோர் ஆஸ்திரேலியாவின் மிரட்டலான பந்துவீச்சுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரசிகர்களின் ஆரவாரத்துடன் களமிறங்கிய உள்ளூர் நாயகனான தோனியும், 26 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
கோலி சதம்
மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கோலி, தனது 41-வது சதத்தை பதிவு செய்தார். இருப்பினும்,போட்டியில் இந்தியா தோற்றுபோனது. தொடரின் முதல் வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்தது.
ஆரோன் பின்ச் பேட்டி
இந்த வெற்றி குறித்து ஆஸி. கேப்டன் ஆரோன் பின்ச் கூறியதாவது:எங்கள் வீரர்கள் மிக சிறப்பாக விளையாடினர். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமே எங்களால் 300 ரன்களை தாண்ட முடிந்தது.
சிறப்பாக விளையாடினோம்
பேட்டிங்கில் மட்டுமல்ல பந்துவீச்சிலும் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டதாக உணர்கிறேன். மேக்ஸ்வெல், கவாஜா ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடினர்.
கடுமையான உழைப்பு
எனது விளையாட்டை முன்னேற்றி கொள்ள நான் கடுமையாக உழைத்து உள்ளேன். அதற்காக நான் கடும் பயிற்சிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன்.
உழைப்பின் பலன்
அதற்கு சரியான பலன் கிடைத்தது என்று நினைக்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளிலும் இதே போன்று சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்று கூறினார்.