அபுதாபி: ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதியில், ஏபி டி வில்லியர்ஸின் ஹேர் ஸ்டைல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கொரோனாவால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி, அமீரகத்தில் அமீரகத்தில் நேற்று (செப்.19) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்திய நிலையில், இன்று கொல்கத்தா - பெங்களூரு அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.
IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி -
இந்த போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில், விராட் கோலி (c), தேவதத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (wk), வனிந்து ஹசரங்கா, சச்சின் பேபி, கைல் ஜேமீசன், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், யுவேந்திர சாஹல் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயன் மோர்கன் (c), ஆந்த்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (wk), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எனினும், தொடக்கத்திலேயே கோலியின் விக்கெட்டை இழந்தது பெங்களூரு. அவர் பிரசித் கிருஷ்ணா ஓவரில் 5 ரன்களில் வெளியேறினார். பிறகு ஃபெர்கியூசன் ஓவரில், தேவ்தத் படிக்கல் 22 ரன்களில் வெளியேற, ரஸல் ஓவரில் பெங்களூரு அணியில் அறிமுகமான இளம் வீரர் ஸ்ரீகர் பரத் 16 ரன்களில் அவுட்டானார். பிறகு, ரஸல் வீசிய வேறமாதிரி யார்க்கர் பந்தில் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி வெளியேறினா டி வில்லியர்ஸ்ர். இதனால், பெங்களூரு அணி 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது
எனினும், டி வில்லியர்ஸ் களமிங்குவதற்கு முன்பு, கேமராக்கள் அவரை அதிகம் மொய்த்துக் கொண்டிருந்தன. காரணம், அவரது புது ஹேர் ஸ்டைல். தலையில் ஒரு சிறிய குடுமி வைத்து, தலையைச் சுற்றி பேண்ட் கட்டி உட்கார்ந்திருந்த டி வில்லியர்ஸ் ஆளே அடையாளம் தெரியாத வகையில் இருந்தார். பிறகு, அவர் பேட்டிங் களமிறங்கிய போது, அரைசதம் அடித்து ஹெல்மெட் கழட்டி பேட்டை உயர்த்தும் போதும், க்ளோஸ் அப்பில் அவரது ஹேர் ஸ்டைல் பார்க்கலாம் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், முதல் பந்திலேயே போல்டாகி வந்த வேகத்திலேயே வெளியேறினார்.
இதையடுத்து, பெங்களூரு அணி மேலும் பல அதிர்ச்சிகளை சந்திக்க வேண்டியிருந்தது. "மிஸ்ட்ரி ஸ்பின்னர்" வருண் சக்கரவர்த்தி ஓவரில் மேக்ஸ்வெல் 10 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இன்று நிச்சயம் மேக்ஸ்வெல்லுக்கான நாள் இல்லை என்று உறுதியாக கூறலாம். ஒரு பந்தை கூட உருப்படியாக அவர் மீட் செய்யவில்லை. இதையடுத்து களமிறங்கிய இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்கா முதல் பந்திலேயே எல்பி ஆகி வெளியேறினார். இதையடுத்து, பெங்களூரு அணி 63-6 என்று தத்தளித்து வருகிறது