For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லுல நாங்க தான் டாப்ல இருக்கணும்.. ஆர்சிபி வீரர் டீ வில்லியர்ஸ் உற்சாகம்

அபுதாபி : ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் தங்களின் ஆர்சிபி அணிதான் எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று அணியின் டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய கேகேஆர் அணியுடனான போட்டியில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

AB de Villiers says Team wants to finish on top of the points table

இந்நிலையில் இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 14 புள்ளிகளை பெற்று முதலிடத்திற்கு ஆர்சிபி முன்னேறியுள்ளது.

ஐபிஎல்லின் 39வது போட்டியில் நேற்றைய தினம் கேகேஆர் அணியுடன் மோதிய ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக அந்த அணியின் டிவிட்டர் பக்கத்தில் டீ வில்லியர்ஸ் வெளியிட்ட வீடியோ குறிப்பில், ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்து பிடிப்பதுதான் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

அந்த அணியின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ள டீ வில்லியர்ஸ், பிளே ஆப் சுற்றுக்கு செல்வது மட்டும் குறிக்கோளல்ல என்றும் அதற்கும் மேலே செல்லவும் ஆர்சிபிக்கு திறமை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மெசேஜை அனைத்து அணிகளுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, October 22, 2020, 10:06 [IST]
Other articles published on Oct 22, 2020
English summary
AB de Villiers says his team wants to top the points table
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X