அஸ்வினை சீண்டிய பெய்ன்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய பௌலர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டுள்ளனர். சிராஜ், சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்தில் ரசிகர்களால் இனவாத அடிப்படையிலான சீண்டல்களுக்கு உள்ளாகினர். போட்டியின்போது கேப்டன் டிம் பெய்ன், அஸ்வினை சீண்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரங்க மன்னிப்பு
இதையடுத்து சர்வதேச அளவில் டிம் பெய்னிற்கு நெருக்கடி ஏற்பட்டது. எதரணி வீரர்களின் கவனத்தை சிதறிடிக்கும் நோக்கத்துடன் ஆஸ்திரேலிய வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். தொடர்ந்து கேப்டன் டிம் பெய்ன் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
பலவீனமே வெளிப்படும்
இந்நிலையில், இத்தகைய சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் மிகவும் கீழ்த்தரமானவை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் க்ரெக் சாப்பல் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் மூலம் நம்முடைய பலவீனமே வெளிப்படும் என்றும் அவர் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகை மூலம் டிம் பெய்னிற்கு பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
பெய்னிற்கு சாப்பல் அறிவுரை
இளம் தலைமுறை வீரர்களுக்கு தன்னுடைய பேட்டிங் மூலம் மிகச்சிறந்த உதாரணமாக டிம் பெய்ன் விளங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கேப் டவுனில் நடைபெற்ற போட்டிகளின்போது சிறப்பான தன்னம்பிக்கை மற்றும் நகைச்சுவையுடன் விளையாடியதை போல தொடர்ந்து அவர் செயல்பட வேண்டும் என்றும் சாப்பல் அறிவுறுத்தியுள்ளார்.