அப்ரிடி சர்ச்சை பேச்சு
அப்ரிடி காஷ்மீர் பற்றி பேசிய வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் பரவியது. வடஇந்திய ஊடகங்கள் இதைப் பற்றி விவாதித்ததால் பரபரப்பு பற்றிக் கொண்டது.
அப்ரிடி விளக்கம்
பின்னர் அப்ரிடி இதற்கு விளக்கம் அளித்தார். தான் பேசிய முழு காட்சிகள் அந்த வீடியோவில் இல்லை என கூறினார். எனினும், அவரது கருத்துக்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சர்ச்சைக்கு உள்ளானது.
அப்ரிடி தவிர்த்து இருக்கலாம்
இந்த விவகாரம் பற்றி மியான்தத் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை அப்ரிடி இந்த விஷயங்களை பேச சரியான ஆள் இல்லை. இதை அவர் தவிர்த்து இருக்கலாம்" என கூறினார்.
கிரிக்கெட் வீரர்கள் பேசாமல் இருப்பது நல்லது
மேலும், "கிரிக்கெட் வீரர்கள் அரசியல் மற்றும் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. அவர்கள் ஓய்வு பெறும் வரை அல்லது ஓய்வை அடுத்து என்ன செய்யப் போகிறோம் என முடிவு செய்யும் வரை கிரிக்கெட் மீது கவனம் செலுத்துவது நல்லது" என மியான்தத் கூறியுள்ளார். அப்ரிடியின் காலை வாரிவிட நேரம் பார்த்து காத்திருந்த மியான்தத் இந்த விவகாரத்தில் அறிவுரை கூறி தன் ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார்.
போதை தலைக்கேறிய அப்ரிடி.. பாக். பிரதமர் அருகே உட்கார்ந்து செய்த செயலை பாருங்கள்