For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தூசியை வைத்து இங்கிலாந்தை தூசி தட்டிய இந்தியா.. களத்தில் நடந்த ஷாக் சம்பவம்.. பின்னணியில் சென்னை!

அகமதாபாத்: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வரிசையாக இரண்டு விக்கெட்டை இழக்க சென்னை முக்கிய காரணம் ஆகும்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் இரவு பகல் ஆட்டமாக நடக்கிறது.

இதில் பிங்க் பால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வரிசையாக இரண்டு விக்கெட்டை இழக்க சென்னை முக்கிய காரணம் ஆகும். இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தாலும் முழுக்க முழுக்க சென்னை பிட்ச் போலவே மாற்றப்பட்டது. சென்னையில் இரண்டாவது டெஸ்ட் நடந்த பிட்ச் போலவே இந்த பிட்ச்சும் மாற்றப்பட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

இரண்டாவது டெஸ்ட் நடந்த பிட்சில் லேசாக பந்து பட்டாலே துகள்கள் பறக்கும். பிட்ச் மிகவும் அதிகமாக காய்ந்து போய் உடைந்து இருந்தால் இப்படி நடக்கும். இப்படிப்பட்ட பிட்ச் நல்ல டர்ன் கொடுக்கும். பந்து அதிகமாக திரும்பும்.

சென்னை

சென்னை

சென்னையில் இதேபோல்தான் நடந்தது. சென்னையில் இப்படி பிட்ச் காய்ந்து இருந்த காரணத்தால்தான் இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்தது. இதனால் இந்த முறையும் இதேபோல் பிட்ச் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து வீக்

இங்கிலாந்து வீக்

இங்கிலாந்து அணிக்கு இதுதான் வீக்னஸ் என்பதால் இப்படி பிட்ச் மாற்றப்பட்டது. இது இந்திய அணிக்கு சாதகமாக திரும்பி உள்ளது. தொடக்கத்திலேயே இதனால் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Story first published: Wednesday, February 24, 2021, 16:15 [IST]
Other articles published on Feb 24, 2021
English summary
Ahmedabad pitch looks like Chennai pitch with more cracks for the third test between India and England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X