ராவல்பிண்டி: பாகிஸ்தானில் நடந்த தேசிய டி-20 போட்டியில் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி 'லாகூர் வொய்ட்ஸ்' அணியை சேர்ந்த கம்ரான் அக்மல் மற்றும் சல்மான் பட் இணைந்து 209 ரன்களை ஓப்பனிங் ரன்னாக எடுத்து இருக்கின்றனர்.
பாகிஸ்தானில் தேசிய டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த தொடரில் இஸ்லாமாபாத் அணிக்கும் லாகூர் அணிக்கும் இடையில் டி-20 போட்டி நடைபெற்றது.
முதலில் களம் இறங்கிய லாகூர் வொய்ட்ஸ் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான கம்ரான் அக்மல் மற்றும் சல்மான் பட் இணையை வீழ்த்த முடியாமல் எதிரணி பவுலர்கள் திணறி வந்தனர்.
இந்த நிலையில் கம்ரான் அக்மல் அதிரடியாக ஆடி 71 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார். இதில் 12 சிக்ஸ்களும் அடக்கம். சல்மான் பட் 49 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். மிகவும் சிறப்பாக ஆடிய இந்த இணை அவுட் ஆகாமல் 209 ரன்கள் எடுத்தனர்.
சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த தேசிய டி-20 போட்டியில் 'ஜோ டென்லி' மற்றும் ' டேனியல் பெல்' இணை ஓப்பனிங் பார்னர்சிப்பாக 207 ரன்கள் எடுத்து இருந்தனர். இதுவே நேற்று வரை டி-20 போட்டியில் அதிகபட்ச ஓப்பனிங் ரன்னாக இருந்தது. இந்த நிலையில் தற்போது அக்மல்- சல்மான் ஜோடி இந்த சாதனையை முறியடித்து இருக்கிறது.