பெஸ்ட் பவுலர்
அதில் அவர் பேசியதாவது: இன்றைய கிரிக்கெட் உலகில், பெஸ்ட் பவுலர் என்றால் அது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான். மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்த சகாப்தம்
பும்ராவை பொறுத்தவரை அவர் இந்த சகாப்தத்தின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும், வேகப்பந்து வீச்சு அரசர்களின் அரசராகவும் திகழ்கிறார். இந்த தலைமுறையின் மிகச்சிறந்த பவுலர் அவர் தான் என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.
யாரை பார்த்து பயம்?
அப்போது நீங்கள் விளையாடிய காலத்தில் யாருடைய பேட்டிங்கை கண்டு பயந்தீர்கள் என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: சச்சின், விவிஎஸ் லக்ஷ்மன், டிராவிட் மற்றும் தோனி ஆகியோருக்கு பவுலிங் போடுவது என்பது கஷ்டமான விஷயம்.
நல்ல முன்னேற்றம்
இவர்கள் மட்டுமல்ல. பொதுவாகவே இந்திய அணியில் அப்போது இருந்த பல பேட்ஸ்மென்கள் எனக்கு மரண பயத்தை ஏற்படுத்தினர். இப்போதும் இந்திய அணியில் திறமை வாய்ந்த பேட்ஸ்மென்கள் இருக்கின்றனர். பவுலிங் துறையிலும் வியத்தகு முன்னேற்றம் காணப்படுகிறது என்றார்.