இன்று தொடக்கம்
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த ஒரு பார்வை இதோ: நடப்பு உலக கோப்பை தொடர் மார்ச் 8ம் தேதியான இன்று தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது.
16 அணிகள்
ஐசிசியில் முழு அளவில் உறுப்பினர்களாக உள்ள 10 மற்றும் 6 துணை உறுப்பினர் நாடுகள் என, உலக கோப்பை கிரிக்கெட்டில் 16 அணிகள் பங்கேற்க உள்ளன.
சூப்பர் 10
முதல் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவார்கள்., இரண்டாவது சுற்று சூப்பர் 10 என்று அழைக்கப்படும்.
ஏ பிரிவு
குரூப்-ஏ பிரிவில், வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகள் விளையாட உள்ளன.
பி பிரிவு
குரூப்-பி பிரிவில், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஹாங்காங், ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன.
அடுத்த சுற்று
சூப்பர்-10 சுற்றில், ஒவ்வொரு குரூப்பிலும் இருந்து தேர்வாகும், மொத்தம் 4 அணிகள், அரையிறுதி போட்டியில் விளையாட தகுதி பெறும்.
பெரிய அணிகள்
குரூப்-1ல், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெறும், குரூப் பி அணிகளில் ஏதாவது ஒன்று இடம் பெறும்.
இந்தியா, பாகிஸ்தான்
குரூப்-2ல், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன், தகுதி சுற்றில் வெற்றி பெறும் குரூப் ஏ அணிகளில் ஏதாவது ஒன்று இடம் பெறும்.
இன்று முதல் ஆட்டம்
இந்த தொடரில் தொடக்க ஆட்டம் ஜிம்பாப்வே-ஹாங்காங் நடுவே இன்று பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. 2வது ஆட்டம் ஸ்காட்லாந்து-ஆப்கானிஸ்தான் நடுவே அதே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
நேரலை
இந்தியாவில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இந்த போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. www.icc-cricket.com என்ற வெப்சைட் முகவரிக்கு சென்று ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம். இந்தியா ஆடும் போட்டிகள் மற்றும், அரையிறுதி, இறுதி போட்டிகளை தவிர்த்து பிற போட்டிகளுக்கு மைதானத்திலும் டிக்கெட் வினியோகம் நடைபெறும்.
ரூல்ஸ் எப்படி..
சூப்பர் 10 சுற்றில், இருந்து 4 அணிகள் செமி-பைனலுக்கு தேர்வாக வேண்டும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஒருவேளை, பல அணிகள் ஒரே புள்ளியை பகிர்ந்திருந்தால், சூப்பர் 10 சுற்றில் அதிக வெற்றி பெற்ற அணி எதுவோ அது செமி-பைனலுக்கு அனுப்பப்படும். இரு அணிகள் ஒரே மாதிரியாக வெற்றியை பெற்றிருந்தால் ரன்-ரேட் கணக்கில் எடுக்கப்படும்.
வெற்றி-தோல்வி
அரையிறுதி போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி 'டை' ஆக முடிந்துவிட்டால், வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்படும். செமி-பைனல் போட்டியை, மழை உள்ளிட்ட காரணங்களால், நடத்த முடியாமல் போனால், சூப்பர்-10 சுற்றில் எந்த அணி முதலிடம் பிடித்ததோ அது பைனலுக்கு முன்னேறும்.
பைனல்
இறுதி போட்டியில் யாருக்கும் வெற்றி தோல்வி கிடைக்காமல், போட்டி டை ஆகிவிட்டால், சூப்பர் ஓவர் நடத்தப்படும். இறுதி போட்டி நடத்தப்படாமல் கைவிடப்பட்டால், இரு அணிகளுமே கோப்பையை பகிர்ந்துகொள்ளும்.