கடினம்
சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக கருதப்படும் டிராவிட்டின் சராசரியே தென்னாப்பிரிக்க மண்ணில் 29 தான். விவிஎஸ் லட்சுமணன் அங்கு ஒரு சதம் கூட அடித்தது இல்லை. தென்னாப்பிரிக்கா மண்ணில் நீங்கள் ரன் அடிக்க வேண்டும் என்றால் குறைந்தது நீங்கள் பத்தாயிரம் பந்துகளை வலைப்பயிற்சியில் எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்
மீண்டும் வாய்ப்பு
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரில் தற்போது பார்மில் இல்லாத புஜாராவுக்கும், ரஹானேவிற்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்க மண்ணில் புஜாரா இதுவரை 13இன்னிங்சில் களமிறங்கி 411 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.ஆனால் ரஹானே தென்னாப்பிரிக்கா மண்ணில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். 6 இன்னிங்சில் விளையாடி 266 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 53 ஆகும். ஒரு வேலை இந்த காரணத்திற்காக அவர் அணியில் இடம்பெற்று இருக்கலாம்
மோசமான வரலாறு
இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஜோடி தென்னாப்பிரிக்கா தொடரிலும் தொடக்க வீரராக களமிறங்குகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் ரோகித்தின். சராசரி 15 ரன்கள் என்ற மோசமான நிலையில் உள்ளது. இதனை மாற்றும் உத்வேகத்துடன் அவர் களமிறங்குகிறார்.கே.எல்.ராகுலின் சராசரி வெறும் 7 ரன்களே ஆகும். இந்த புள்ளி விவரத்தை மாற்றும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.
பலம்
ரிஷப் பண்ட் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் களமிறங்குவதால், அவருக்கும் முன் அனுப்வம் இல்லை. இதை தவிர தென்னாப்பிரிக்கா ஏ தொடரில் கலக்கிய விஹாரி அணியில் இடம்பெற்றாலும், அவருக்கு கண்டிப்பாக அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ் என சிறந்த வீரர்கள் உள்ளதால், அது கவலை இல்லை.