வீட்டில் முடங்கிய தம்பதி
தங்களுடைய பரபரப்பான வாழ்க்கையிலும், இனிமையான தருணங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர்கள் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி. சிறிய இடைவெளி கிடைத்தால் நாமெல்லாம் வீட்டிற்குள் ஓய்வு எடுப்பது குறித்து யோசிப்போம். ஆனால் இவர்கள் ஊர் சுற்ற கிளம்பி விடுவார்கள்.
வீட்டில் முடங்கிய ஜோடி
இவ்வாறு புதிய புதிய இடங்களுக்கு செல்வதை மகிழ்ச்சியுடன் செய்துவந்த விராட் -அனுஷ்கா தம்பதி தற்போது கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலையில், வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வாழ்க்கை தனக்கு தேவைக்கு அதிகமாகவே கொடுத்துள்ளதாக உருக்கம் தெரிவித்துள்ளார் அனுஷ்கா சர்மா.
View this post on InstagramA post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on
நீண்ட நெடிய பதிவு
இந்நிலையில் ஊரடங்கால், வீட்டிற்குள்ளேயே, உள்ள அனுஷ்கா சர்மா, தான், விராட் கோலி மற்றும் தங்களது நாய் ஆகியோர் அடங்கிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த நேரத்தில் தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு கிடைத்துள்ளவை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அனுஷ்கா. இதுகுறித்து நீண்ட பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
உணர வைத்த தருணம்
இந்த நேரத்தில் வாழ்க்கைக்கு எது முக்கிய தேவை என்பதை உணர முடிகிறது என்று அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் நல்ல உணவு, குடிநீர், வீடு, ஆரோக்கியமான உடல் போன்றவையே முக்கியமாக தெரிவதாக அவர் கூறியுள்ளார். இதை மீறி அளவுக்கு அதிகமாக தனக்கு கிடைத்துள்ளதாகவும் அதற்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடவுளிடம் பிரார்த்தனை
உணவு, வீடு ஆகியவற்றை அத்தியாவசிய தேவைகளில் நாம் அடக்கி விடுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த அடிப்படை தேவைகள் கிடைக்காத மக்களுக்குகாக தான் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கடவுள் பாதுகாப்பான வாழ்க்கையை அளிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.