அதிக வேதனை
சர்வதேச கிரிக்கெட் வாழ்வு அல்ப ஆயுசில் முடிந்து விட்டதா? கிரிக்கெட் கிட்டை எரித்துவிட வேண்டுமா? அதை நினைக்கும் போது மனது அதிக வேதனை அடைகிறது.
ஜீரணிக்க முடியவில்லை
எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றார். மற்ற வீரர்களும் வேதனையையும், விரக்தியையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். உலக கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் தோல்வி தழுவியது.
தகுதி பெறவில்லை
அதனால், 2019 உலக கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் போனது. அந்த வேதனையையும், இப்போது குறிப்பிட்டு உள்ள வீரர்கள், அந்த வேதனையை விட இது கொடுமையானது என்று கூறியுள்ளனர்.
திடீர் ஓய்வு
முன்னதாக, ஜிம்பாப்வே அணி முக்கிய வீரர் சாலமன் மைர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். யாரும் எதிர்பாரா வண்ணம், திடீரென ஓய்வு முடிவை சாலமன் மைர் எடுத்தது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.