2வது ஆஷஸ் டெஸ்ட்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
நெட் பவுலராக மாறிய அர்ஜூன்
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நெட் பயிற்சியின்போது பல நெட் பவுலர்கள், இங்கிலாந்து வீரர்களுக்கு பந்து வீசினர். அப்போது அர்ஜூனும் அவர்களில் ஒருவராகப் போய் பந்து வீசினர். இங்கிலாந்து வீரர்களுக்கு முதலில் அவர் யார் என்பது தெரியவில்லை.
செம பந்து வீச்சுப்பா
அர்ஜூன் டெண்டுல்கர் சிறப்பாக பந்து வீசுவதாக இங்கிலாந்து பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். அதன் பிறகே வீரர்கள் அவர் யார் என்று விசாரித்தபோது அர்ஜூன் டெண்டுல்கர் என்று தெரிய வந்து ஆச்சரியப்பட்டனராம்.
குக் பாராட்டு
அர்ஜூன் பந்து வீசுவதை உன்னிப்பாக கவனித்த கேப்டன் அலிஸ்டயர் குக், அர்ஜூன் சிறப்பாக பந்து வீசுவதைப் பார்த்துப் பாராட்டினார்.
இந்திய வீரர்களுக்கும் வீசியவர்
அர்ஜூன் இதுபோல தேசிய அணி வீரர்களுக்குப் பந்து வீசுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு இந்திய அணி வீரர்களுக்குப் பந்து வீசியுள்ளார். ஐபிஎல் போட்டிகளின்போது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கும் பந்து வீசியுள்ளஆர்.
பால் பாய்
சச்சின் தனது கடைசி மற்றும் 200வது சாதனை டெஸ்ட் போட்டியில் மும்பை வாங்கடே மைதானத்தில் ஆடியபோது பந்து எடுத்துப் போடும் பையனாகவும் செயல்பட்டார் அர்ஜூன்.
தம்பி பேட்டிங்கும் பண்ணுவாப்ல
பந்து வீச்சில் மிளிர்ந்து வரும் அர்ஜூன் இடது கை பேட்ஸ்மேனும் கூட. திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி அணிக்காக ஆடியபோது 42 பந்துகளில் 118 ரன்களைக் குவித்து கடந்த ஆண்டு அசத்தினார்.
லார்ட்ஸ் பக்கத்துல தான் வீடு
லார்ட்ஸ் மைதானத்திற்கு அருகில்தான் சச்சின் டெண்டுல்கர் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கியுள்ளார். ஜூன் - ஜூலை மாதத்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியையொட்டி லண்டன் வந்து விடுவார் சச்சின். அப்போது இந்த வீட்டில்தான் தங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.