குற்றச்சாட்டு
இதுவே பேட்ஸ்மேன்களை மதிப்பது போல் பந்துவீச்சாளர்களை அதுவும் சுழற்பந்துவீச்சாளர்களை யாரும் மதிப்பது என்ற குற்றச்சாட்டுக்கு ஏற்றார் போல் அமைந்தது. ஆனால் அஜாஸ் பட்டேலுக்கு கிடைக்க வேண்டிய கௌரவத்தை சக சுழற்பந்துவீச்சாளராக வழங்கிவிட்டார் அஸ்வின்
பரிசு
நேற்று போட்டி முடிந்ததும் அஸ்வின், இந்திய வீரர்களின் ஜெர்ச்சியில் பயிற்சியாளர் தொடங்கி அணியில் இருந்த கடைசி வீரரின் கையெழுத்தை போட்டு அஜாஸ் பட்டேலுக்கு வழங்கினார். அஸ்வினின் இந்த பாசத்தால் அஜாஸ் பட்டேல் திக்குமுக்காடிவிட்டார். ஆனால் அஸ்வின் அதோடு நிற்கவில்லை.
டிவிட்டர்
டிவிட்டரில் பெயருக்கு பின்னால் நீல நிற டிக் இருப்பது தான் கவுரவம் என்று நினைக்கும் உலகம் இது. அதாவது உண்மையான பிரபலங்களுடைய சமூக வலைத்தள பக்கம் தான் இது என்று கண்டறிய நீல நிற டிக் டிவிட்டரால் வழங்கப்படும். இந்த நில நிற டிக் இல்லாமல் பலரும் போலி பக்கங்களை உருவாக்கி பல பிராலங்களையும் சிக்கலில் சிக்க வைப்பதுண்டு.
Recommended Video
அங்கீகாரம்
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்து 3 ஆண்டுகள் ஆகியும் அஜாஸ் பட்டேலுக்கு நீற நிற டிக் என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனை அறிந்த அஸ்வின், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தியவருக்கு ஏன் இன்னும் நீல நிற டிக் வழங்கவில்லை என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பினார்.இதனையடுத்து டிவிட்டர் நிர்வாகம் உடனே அஜாஸ் பட்டேலுக்கு நீல நிற டிக் வழங்கியது. அஸ்வினின் இந்த செயல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.