புதிய மைல்கல்
இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் நடந்து முடிந்தது. இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதில் உலகில் அதிவேகமாக 400 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 77 போட்டிகளில் அஸ்வின் ஆடி 2ம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் உள்ளார். அவர் 72 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மறைமுக விமர்சனம்
இது குறித்து ட்வீட் செய்திருந்த முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங், போட்டி 2 நாட்களில் முடிந்துவிட்டது. இது கிரிக்கெட்டிற்கு நல்லதா என தெரியவில்லை. இதுபோன்ற ஆடுகளத்தில் ஆடியிருந்தால் ஹர்பஜன் சிங், அனில் கும்ளே ஆகியோர் 800 விக்கெட்களை எடுத்திருப்பார்கள் என அஸ்வினை மறைமுகமாக விமர்சித்தார்.
பதிலடி
இதற்கு பதிலடி தரும் வகையில் அஸ்வின் இன்று ட்வீட் செய்துள்ளார். அதில், பொருட்களை ஒருவரிடம் விற்க பல்வேறு வியூகங்கள் உள்ளன. அதுபோன்று தற்போது எண்ணங்களும் திணிக்கப்படுகின்றன. நாம் மற்றவரின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரை அது நமக்குதான் ஆபத்து.
சுய சிந்தனை
நமது முடிவுகள் பெரும்பாலானோருக்கு எதிராக இருந்தாலும் நாம் நம் முடிவில் உறுதியாக நிற்க வேண்டும். வேறு யாராலும் இதுதான் சரியென திணிக்கப்பட்டிருக்காமல் சுயமான சிந்தனை வேண்டும். அது நமது முடிவு என யுவ்ராஜ் சிங்கிற்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.