தடை முடிந்தது
அதில் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து தாறுமாறாக விமர்சிக்க, ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே அழைத்து தடை விதித்தது பிசிசிஐ. தற்போது தடை முடிந்து அவர்கள் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடி வருக்கின்றனர்.
அந்த போட்டோ
இந் நிலையில், தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வரும் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ரோகித் ஷர்மாவுடன் சேர்ந்து ராகுல், ஹர்திக் பாண்டியாவை செமையாக கலாய்க்கும் போட்டோவை ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவை அஸ்வின் தமது இன்ஸ்டா கிராமில் பகிர்ந்திருக்கிறார்.
காபி குடிக்கும் அஸ்வின்
அந்த போட்டோ பதிவில், சக வீரர்களான ரோகித் ஷர்மா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் அமர்ந்து காபி குடிக்கிறார் அஸ்வின். அதில், ஒரு கப் காபி இது வரை கேட்காத புதிய கதை சொல்லும், என்ன சொல்கிறீர்கள் ரோகித் ஷர்மா, குல்தீப்? என குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் கலாய்
இந்த பதிவை ரசிகர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டதால் தான் இந்த மாதிரி பதிவிட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு ரசிகர் தரப்போ, தென் ஆப்ரிக்க தொடரில் இடம் பெறுவதை தான் அஸ்வின் அப்படி கூறுகிறார் என்று கூறி வருகின்றனர்.