மூன்றாவது டெஸ்ட்
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பின் அஸ்வின் அளித்த பேட்டியில், அதில் ஆஸ்திரேலியாவில் இருந்த பார்மை தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆஸ்திரேலியாவில்தான் வீரர்களின் வீடியோக்களை பார்த்து ஆட தொடங்கினேன். ஒவ்வொரு வீரரும் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்த்தேன்.
8 மணி நேரம்
மொத்தமாக 8 மணி நேரம் வீடியோக்களை பார்த்தேன். ஒவ்வோர் வீரரும் எங்கே சொதப்புகிறார் என்பதை வீடியோவாக பார்த்தேன். இதுதான் எனக்கு சாதகமாக மாறியது. நான் புதிய விஸ்வரூபம் எடுக்க காரணமாக இருந்தது.
வீடியோ
நான் ஏன் இப்படி வீடியோ பார்த்தேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் எங்கும் தவறு செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இதற்கு முன்பும் நான் வீடியோ பார்த்து வீரர்களின் ஆட்டங்களை கணித்து இருக்கிறேன், ஆனால் இப்போதெல்லாம் 7-8 மணி நேரம் இப்படி வீடியோக்களை பார்க்கிறேன்.
பேட்ஸ்மேன்
இதனால் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் எதிராக திட்டங்களை வகுக்க எளிதாக முடிந்தது. முக்கியமாக ஒவ்வொரு பிட்சிலும் வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதை கவனமாக பார்த்தேன். இதுதான் தற்போது என்னுடைய பார்மிற்கு முக்கிய காரணம் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.