For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்மிண்டனில் அடுத்த "ஷாக்"... ஜுவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா மீண்டும் தோல்வி!

By Karthikeyan

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடி மீண்டும் தோல்வியைத் தழுவியது.

பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி, நெதர்லாந்தின் செலினா பைக் மற்றும் மஸ்கின் ஜோடியுடன் மோதியது.

Ashwini Ponnappa-Jwala Gutta lose, badminton doubles

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், இந்திய ஜோடி 16-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் நெதர்லாந்து இணையிடம் வீழ்ந்தது. இதன் மூலம் காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

முன்னதாக நடந்த முதல் சுற்று போட்டியில் உலகின் நம்பர் 1 ஜோடியான ஜப்பானின் மிசாகி மட்சுடோமோ மற்றும் அயாகா டகசாகி ஜோடியிடம், இந்திய ஜோடி 15-21, 10-21 என்ற நேரடி செட் கணக்கில் தோற்றுப் போனது.

Story first published: Friday, August 12, 2016, 20:07 [IST]
Other articles published on Aug 12, 2016
English summary
Rio Olympics 2016: Ashwini Ponnappa and Jwala Gutta lost to the Dutch pairing of Eefje Muskens-Selena Piek 16-21, 21-16, 17-21 to suffer their second loss.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X