ரோகித் யுத்தி என்ன?
இதனால் பும்ரா இடத்தை இடம்பிடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. தற்போது ரோகித் சர்மா 3 வேகப்பந்தவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்ட் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் 2 சுழற்பந்தவீச்சாளர் என்ற வரிசையில் இந்திய அணி வீரர்கள் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் சுழற்பந்துவீச்சை பலப்படுத்த ரோகித் நினைத்தால், பும்ரா இடத்துக்கு ஒரு சுழற்பந்துவீச்சாளர் வருவார்.
ரவி பிஸ்னாய்
இந்தியாவுக்கு இதுவரை 15 டி20 போட்டியில் விளையாடி 15 விக்கெட்டுகளை பிஸ்னாய் வீழ்த்தி இருக்கிறார். ரன்களையும் கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்துவீசி வருகிறார். மேலும் சுழற்பந்தவீச்சுக்கு சாதகமான சூழலில் போட்டி நடைபெறுவதால், இவருடைய லெக் ஸ்பின் அணிக்கு தேவைப்படும்.
ஆர்ஸ்தீப் சிங்
டி20 போட்டிக்கு எப்போதுமே இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முக்கியம். இதனால் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இதுவரை 6 சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ஆர்ஸ்தீப் சிங் 9 விக்கெட்டுகளை வீழத்தி இருக்கிறார். இதில் ஓவருக்கு அவர் 6.34 ரன்களை தான் சராசரியாக கொடுத்திருக்கிறார்.
ஆவேஷ் கான்
25 வயதான ஆவேஷ் கான், துல்லியமாக யாக்கர் லெங்த் பந்தகளை வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை தர கூடியவர். 13 சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 11 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருக்கிறார். பும்ராவை போல் ஆவேஷ் கானையும் ரோகித் சர்மா, இறுதி ஓவர்களை வீச அழைக்கலாம். இதுவரை 38 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.