4 ஆண்டுகள்
கடைசியாக ஆசிய கோப்பை போட்டி 2018ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொடர் டி20 கிரிக்கெட் போட்டிகளாக நடைபெறுகிறது. இதில் 7 முறை சாம்பியனான இந்திய அணி களமிறங்குகிறது.
இந்தியா Vs பாகிஸ்தான்
பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளும் இந்த தொடரில் விளையாடுகிறது. இதனிடையே உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக மோதல்
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை காரணமாக தற்போது இருத்தரப்பு போட்டிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறுவது இல்லை. இதனால் இது போன்ற பல அணிகள் பங்கேற்கும் தொடரில் தான் விளையாடுகிறது. கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடியது.
டி20 உலகக் கோப்பை
டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதம் நடைபெறும் நிலையில், இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் நல்ல பயிற்சிக்களமாக அமையும். ஆனால், இரு நாடுகளின் ஆடுகளமும், மைதானமும் எவ்வித தொடர்பும் இல்லாதது. இதனால், இதில் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை வைத்து டி20 உலகக் கோப்பை குறித்து முடிவு எடுப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.