காயம்
இந்த நிலையில், இடுப்பில் அறுவை சிகிச்சை, கொரோனா தொற்று என அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்தித்து வரும் ராகுல், முழ உடல் தகுதியை பெற 2 வாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆசிய கோப்பை போட்டியில் அவர் பங்கேற்பது உடல் தகுதியை பார்த்து தான் முடிவு செய்யப்படும் என்று தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
புதிய பொறுப்பு
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் அளித்துள்ள பேட்டியில், கேஎல் ராகுல் இல்லாததால் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் என மாற்றி வருகிறார்கள். இதனால் ஆசிய கோப்பையில் நிச்சயம் விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.
ஐபிஎல் அனுபவம்
விராட் கோலிக்கு தொடக்க வீரராக களமிறங்குவது ஒன்றும் புதிது அல்ல. அவர் ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி இருக்கிறார். இதனால் அவருக்கு அனுபவம் இருக்கிறது. விராட் கோலியை ஃபார்ம் குறித்தும் கவலைப்பட தேவையில்லை. இந்திய அணி இந்த மாற்றத்தை செய்யும் என நம்பிகிறேன்.
இந்தியா Vs பாகிஸ்தான்
இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் 28ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில், விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கினால், நடுவரிசையில் சூர்யகுமார், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா,தினேஷ் கார்த்திக், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் நடுவரிசையில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.