சூழலுக்கேற்ப தயாராகவில்லை
இதுகுறித்து மிர்பூரில் பாகிஸ்தான் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் மிர்பூர் சூழலுக்குத் தயாராகவில்லை. இதனால்தான் முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைய நேரிட்டு விட்டது.
பிட்ச்சை சரியாக கணிக்கவில்லை
நாங்கள் பிட்ச்சை சரியாக கணிக்கவில்லை. சூழலை சரியாக புரிந்து கொள்ளவில்லை. அட்டாக்கிங் ஷாட்களில் நாங்கள் சரியாக ஆடவில்லை.
ஏமாற்றம்தான்
எல்லோருமே இந்தியாவிடம் தோற்றுப் போனதால் ஏமாற்றமடைந்தோம். இருப்பினும் மீதமுள்ள போட்டிகளில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற ஆர்வமாக இருக்கிறோம்.
இந்தியாவும் வர வேண்டும்
இந்தியாவும் இறுதிப் போட்டிக்கு வர வேண்டும். அங்கு வைத்து நாங்கள் அவர்களை வென்று கணக்கை சரி செய்வோம் என்றார் மாலிக்.