For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொத்தமாக சரிந்த பவுலிங்.. 2வது போட்டியிலும் இந்தியா போராடி தோல்வி.. ஒருநாள் தொடரை வென்றது ஆஸி!

சிட்னி: சிட்னியில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வீழ்ந்துள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஒருநாள், டி 20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் இந்த வருடத்தின் மிக முக்கியமான தொடராக இருக்க போகிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணியில் அனைத்து வீரர்களும் பார்மில் உள்ளனர். முக்கியமாக வார்னர், ஸ்மித், பின்ச், மேக்ஸ்வெல் என்று முக்கியமான பேட்ஸ்மேன்கள் எல்லோரும் பார்மிற்கு திரும்பி உள்ளனர். இதனால் அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் வலிமையாக இருக்கிறது.

இந்தியா

இந்தியா

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரும் மிகவும் வலிமையாகவே இருக்கிறது. இந்தியா இந்த முறை 7 பேட்ஸ்மேன்கள் உடன் களமிறங்கி உள்ளது. மயங்க், தவான், கோலி, ராகுல், ஷ்ரேயாஸ், பாண்டியா, ஜடேஜா என்று பெரிய படையே இந்திய அணியிடம் உள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸி டாஸ் வென்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இன்று போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் தொடரை கைப்பற்றிவிடும். இன்று இந்திய அணியில் அதே வீரர்கள் ஆட உள்ளனர். மயங்க், தவான், கோலி, ராகுல், ஷ்ரேயாஸ், பாண்டியா, ஜடேஜா, ஷமி, நவ்தீப் சைனி, பும்ரா, சாஹல் ஆகியோர் ஆட உள்ளனர்.

அதிரடி

அதிரடி

இன்று பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லோரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என்று அனைத்து ஆர்டரில் இறங்கிய பேட்ஸ்மேன்களும் அதிரடி காட்டினார்கள். டாப் 6 பேட்ஸ்மேன்களும் 50+ ரன்களை எடுத்தனர். வார்னர் 83,பின்ச் 60, ஸ்மித் 104, மார்னஸ் 70, மேக்ஸ்வெல் 63 என்று பொளந்து கட்டினார்கள்.

பாண்டியா

பாண்டியா

இன்று பவுலிங் செய்த பாண்டியா மட்டும் கொஞ்சம் சிறப்பாக பந்து வீசினார். 4 ஓவரில் இவர் 1 விக்கெட் எடுத்தார். ஷமி, பும்ரா இருவரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 389/4 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா 390 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது.

எப்படி

எப்படி

390 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்கம் சரியாக இல்லை. மிடில் ஆர்டரும் கொஞ்சம் சொதப்பியது. மயங்க் அகர்வால் 28, தவான் 30 ரன்களுக்கு அவுட் ஆனார்கள். ஷ்ரேயாஸ் ஐயர் 38 ரன்கள் எடுத்தார். கோலி 89 ரன்களும், கே. எல் ராகுல் 76 ரன்களும் எடுத்தனர். பாண்டியா, ஜடேஜா தலா 28 மற்றும் 24 ரன்கள் எடுத்தனர்.

தோல்வி

தோல்வி

இந்திய அணியின் பேட்டிங் கொஞ்சம் நன்றாக இருந்தாலும்.. போதுமான இலக்கை இந்திய அணியால் எடுக்க முடியவில்லை. இதனால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து இந்தியா 338 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

Story first published: Sunday, November 29, 2020, 17:30 [IST]
Other articles published on Nov 29, 2020
English summary
AUS vs IND: India has to bowl first against as Aussie chooses batting after winning toss.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X