நடராஜன்
இந்த போட்டியில் நடராஜன் இந்திய அணிக்காக களமிறங்கினார். இந்திய அணியில் நடராஜன் தேர்வு செய்யப்பட்டு இருந்ததை சஞ்சய் மஞ்சிரேக்கர் விமர்சனம் செய்தார். நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதை ஏற்க முடியாது. அவர் டெத் ஓவர்களில் மட்டுமே நன்றாக வீசுவார்.
நன்றாக வீசுவார்
இந்திய அணியில் டெத் ஓவரில் பவுலிங் செய்ய சமி, பும்ரா இருக்கிறார்கள். புதிய பந்தில் ஸ்விங் செய்யத்தான் ஆட்கள் இல்லை. நடராஜன் புதிய பந்தில் நன்றாக வீச மாட்டார். நடராஜன் முதல் பவர்பிளேவில் நன்றாக பவுலிங் செய்ய கூடிய வீரர் இல்லை. இதனால் அவரை அணியில் எடுத்து இருக்க கூடாது என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் குறிப்பிட்டு இருந்தார்.
பதிலடி
இந்த நிலையில் சஞ்சய் மஞ்சிரேக்கர் வைத்த விமர்சனத்திற்கு தமிழக வீரர் நடராஜன் அதிரடி பதிலடி கொடுத்து உள்ளார். டெத் ஓவரில் மட்டும் நடராஜன் நன்றாக பவுலிங் செய்வார் என்ற விமர்சனத்திற்கு நடராஜன் பதிலடி கொடுத்துள்ளார். தன்னுடைய முதல் போட்டியிலேயே.. தான் போட்ட இரண்டாவது ஓவரில் மெய்டன் விக்கெட் எடுத்துள்ளார்.
விக்கெட்
இதன் மூலம் பவர்பிளேவில் நீண்ட நாட்களுக்கு பின் விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்றுள்ளார். அதோடு டெத் ஓவர்களில் தான் போட்ட 2 ஓவரில் ஒரு விக்கெட் எடுத்து 8 ரன்கள் கொடுத்துள்ளார். பவர்பிளேவில் நடராஜன் சரியாக வீச மாட்டார் என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் குறிப்பிட்டு இருந்தார்.
முதல் போட்டி
அதற்கு தன்னுடைய முதல் போட்டியிலேயே நடராஜன் நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார். மும்பை வீரர்களை தவிர வேறு யாரை பற்றியும் சஞ்சய் மஞ்சிரேக்கர் சரியாக பேசியது கிடையாது. சஞ்சய் மஞ்சிரேக்கரின் மோசமான தொடர் விமர்சனங்களுக்கு ஒவ்வொருமுறையும் இப்படி வீரர்கள் பதிலடி கொடுப்பது வழக்கம், இந்த முறை நடராஜன் அந்த பதிலடியை கொடுத்துள்ளார்.