பேட்டிங்
இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் நன்றாக பவுலிங் செய்து வந்த ஷமி திடீரென நீக்கப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியில் இன்று ஷமிக்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் அணிக்குள் வந்துள்ளார். பும்ரா எப்போதும் போல அணியில் நீடிப்ப்பார்.
மோசம்
இந்த தொடரில் இந்திய அணியின் பவுலிங் மோசமாக சொதப்பி வந்தது. முக்கியமாக பும்ரா, சாஹல் இருவரும் விக்கெட் எடுக்க கஷ்டப்பட்டனர். அதிக அளவு ரன்களை இவர்கள் இருவரும் விட்டுக்கொடுத்தனர். முக்கியமாக பார்ம் இன்றி பும்ரா மோசமாக திணறி வருகிறார்.
ஆனால் என்ன
ஆனால் ஷமி இரண்டு போட்டியிலும் நன்றாக பவுலிங் செய்தார். தேவையான நேரங்களில் விக்கெட் எடுத்தார். ;பார்ம் இன் அவுட் ஏ என்றுதான் பவுலிங் செய்து வந்தார். பெரிய அளவில் மைதானத்தில் இவர் சொதப்பவில்லை. ரன்னும் அதிகமாக கொடுக்கவில்லை.
நீக்கம்
ஆனால் இவரை நீக்கிவிட்டு இன்று ஷரத்துல் தாகூருக்கு கோலி வாய்ப்பு கொடுத்துள்ளார். பந்து ஸ்விங் ஆக வேண்டும் என்பதற்காக கோலி இவருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். ஆனால் ஷமி நீக்கப்பட்டது ஏன் என்று இன்னும் தெரியவில்லை. இது போன்ற தவறான முடிவுகளை எடுப்பது யார் என்றும் இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கோலியின் முடிவு
கோலியின் இந்த முடிவு இன்று விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் ஷமி, நடராஜன், பும்ரா ஆகியோர் களமிறங்கி இருந்தால் அது பெரிய திருப்பமாக இருந்து இருக்கும். ஆனால் கோலி ஏனோ ஷமியை நீக்கிவிட்டு ஷரத்துல் தாகூருக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார்.