ஆஸி. பலம்
இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலமாக உள்ளன. ஆனாலும் தொடரை கைப்பற்றும் வகையில் முழு பலத்துடன் ஆஸ்திரேலியா சிறந்து விளங்குகிறது. அந்த அணியில் பல்வேறு வீரர்கள் சிறப்பாக ஆடி வஇந்த உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலமாக உள்ளன. ஆனாலும் தொடரை கைப்பற்றும் வகையில் முழு பலத்துடன் ஆஸ்திரேலியா சிறந்து விளங்குகிறது. அந்த அணியில் பல்வேறு வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். ருகின்றனர்.
சொந்த மண்ணில் போட்டி
ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இங்கிலாந்துக்கு வாய்ப்பு இருக்கிறது. சொந்த மண்ணில் நடைபெறுவதால் இங்கிலாந்திற்கு கோப்பை கிடைக்கும் என்று சொல்ல வில்லை. இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக கடந்த சில ஆண்டுகளாக ஆடி வருகின்றனர்.
ஆஸி.க்கு வாய்ப்பு அதிகம்
எனவே இந்த உலக கோப்பை தொடரில் நிச்சயம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அல்லது இந்தியா ஆகிய 3 அணிகள் சிறப்பாக விளையாடும். இந்த 3 அணிகளில் ஒரு அணிக்கு உலக கோப்பை உறுதி, அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்புகள் அதிகம்.
பும்ரா காரணம்
இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அதிக ரன்களை குவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றார்.