கடினமான இலக்கு
335 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணரத்னே மற்றும் குசால் பெரேரா இருவரும் அபார தொடக்கத்தை அமைத்தனர். தொடக்கம் முதலே ஆஸ்திரேலியாவின் பவுலிங்கை பதம் பார்த்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள்
இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 115 ரன்களை குவித்தனர். குசால் பெரேரா 52 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கருணரத்னேவுடன் திரிமன்னே ஜோடி சேர்ந்தார். திரிமன்னே 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கருணரத்னே காலி
சிறப்பாக ஆடி ரன்களை குவித்துக கொண்டிருந்த இலங்கை கேப்டன் கருணரத்னே, 97 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை 3 ரன்களில் தவறவிட்டார். இலங்கை அணியின் ஸ்கோர் 32 ஓவரில் 186 ரன்கள் என்ற இருந்தபோது கருண ரத்னே அவுட்டானார்.
87 ரன்களில் தோல்வி
அதன்பின்னர், தான் இலங்கையிடம் இருந்து ஆட்டம், ஆஸி.யின் பக்கம் கை மாறியது. இலங்கை பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே வந்தனர். அனுபவ வீரர்கள் மேத்யூஸ் மற்றும் திசாரா பெரேராவும் சோபிக்கவில்லை. இதையடுத்து 46வது ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருது
இதன் மூலம் ஆஸ்திரேலியா 8 புள்ளிகள் பெற்று, பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் வென்றார். ஒரு கட்டத்தில் அருமையாக ஆடிய இலங்கை, வெற்றி பெற்றுவிடும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் முடிவு வேறு மாதிரி இருக்க அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.