|
நிறுத்த முடியாது
ரோஹித் சர்மா பற்றி தன் பேச்சில் குறிப்பிட்ட மாக்ஸ்வெல், அவர் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களான 264 ரன்கள் அடித்தவர். அவரை எல்லாம் (ரன் குவிப்பதில் இருந்து) நிறுத்த முடியாது என கூறினார்.
பந்தை சரியாக கணிப்பார் ரோஹித்
மேலும், ரோஹித் வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல் இரண்டையுமே அடித்து ஆடக் கூடியவர் எனவும் தெரிவித்தார். ரோஹித் சர்மா பந்தை சரியாக கணித்து, சரியான நேரத்தில் அடிக்கும் திறன் பெற்று இருக்கிறார் எனவும், அதுதான் ரோஹித்தின் சிறப்பு எனவும் கூறினார் மாக்ஸ்வெல்.
மூன்று இரட்டை சதம்
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இதுவரை மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 209 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலியாவில் ரன் வேட்டை
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் சராசரி 47 வைத்துள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக 57.50 சராசரி வைத்துள்ளார். இந்த முறை ரோஹித் சர்மா டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்துள்ளார் என்பதால் ரோஹித் ஆஸ்திரேலியாவில் ரன் வேட்டை நடத்த அதிக வாய்ப்புள்ளது.