பெரும் பின்னடைவு
மருத்துவ கண்காணிப்பு என்பதால் அடுத்த டெஸ்டில் ஸ்மித் விளையாடவில்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். ஏன் எனில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அணியில் இணைந்த அவர், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து சிம்ம சொப்பனமாக இருந்தார்.
பவுலிங் அட்டாக்
ஆஸ்திரேலிய அணியின் நிலைமை இப்படி இருக்க, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிலைமையோ வேறு மாதிரி இருக்கிறது. ஆர்ச்சரின் இந்த பவுலிங் அட்டாக்கை பற்றி தீவிரமாக யோசித்து வருகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
விதிகள் தளர்வு
ஆர்ச்சர் அண்மையில் முடிந்த உலக கோப்பையில் இங்கிலாந்து அணியின் கதாநாயகனாக பார்க்கப்பட்டவர். அவரது பூர்வீகம் இங்கிலாந்து கிடையாது. ஆனாலும் அவரது திறமை, வேகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பார்த்து விதிகளை தளர்த்தி இங்கிலாந்து அணிக்கு கொண்டு வந்தது கிரிக்கெட் வாரியம்.
அறிமுக போட்டி
அதே நேரத்தில் ஒருநாள் போட்டிகளில் தடம்பதித்து வந்த அவர் டெஸ்ட் தொடரில் இப்போது தான் அறிமுகமாகி இருக்கிறார். ஆஷஸ் தொடர் தான் அவருக்கு அறிமுக டெஸ்ட் போட்டி. அந்த தொடரில் தம்மை நிரூபிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் பந்து ஸ்மித்தை படுக்கையில் கொண்டு சேர்த்திருக்கிறது.
கடும் அதிருப்தி
எனவே, அவரின் பவுலிங்கால் கடும் அதிருப்தி ஏற்படுத்தி இருப்பதாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் புகார் வாசித்திருக்கின்றனர். அதிலும் ஸ்மித் கீழே விழுந்த போது அவர் சிரித்துக் கொண்டிருந்தது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வேண்டும் என்றே இது போன்று அச்சுறுத்தும் வகையில் பந்தை வீசினாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர். அதற்கு பதில் சொல்லமுடியாமல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடுமாறி வருகிறது.
ரசிகர்களின் சந்தேகம்
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் இந்த ஆஷஸ் டெஸ்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒரே வீரர் அவர் மட்டும் தான். அவர் ஆட்டமிழந்த நிலையில் ஒரு வழியாக தட்டுத்தடுமாறி ஆட்டத்தை டிரா செய்திருக்கிறது ஆஸ்திரேலியா. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது ஸ்மித்தால் தான். எனவே, ரசிகர்களின் சந்தேகம் அதிக வலு பெற்றிருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.