4வது டெஸ்ட் போட்டி
இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி துவங்கி 3 நாட்கள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்சை முடித்துள்ளன. முதல் இன்னிங்சில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரைவிட 33 ரன்கள் பின்தங்கியுள்ளது.
உயர்ந்த அணியின் ஸ்கோர்
இந்தியாவின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் வீரர்கள் ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அரைசதங்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 123 ரன்களை குவித்தனர்.
சீண்டல்களை எதிர்கொண்ட தாக்கூர்
கடந்த போட்டியில் பௌலர் அஸ்வினை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் சீண்டிய விவகாரம் பெரிய அளவில் கண்டனங்களை எழுப்பியது. இந்நிலையில் பிரிஸ்பேனில் நடைபெற்ற 4வது போட்டியிலும் இத்தகைய சீண்டல்களை தான் சந்தித்ததாக பௌலர் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டில் கவனம்
ஆனால் அவர்களின் இத்தகைய சீண்டல்களுக்கு தான் எந்தவித ரிப்ளையும் கொடுக்கவில்லை என்றும் ஒன்றிரண்டு முறை பதில் கொடுக்க முயன்றதாகவும் தாக்கூர் தெரிவித்துள்ளார். அவர்கள் தொடர்ந்து தன்னை சீண்ட முயன்றதாகவும் ஆனால் அதை தான் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தியதாகவும் அவர் கூறினார்.