எத்தனை
இன்னும் 25 ஓவர்கள் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி 110 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த போட்டி டிரா ஆகவோ அல்லது இந்திய அணி வெற்றிபெறவோ அதிக வாய்ப்பு உள்ளது.
எப்படி
இப்படிப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரஹானே அனுப்பிய பேட்டிங் ஆர்டர் ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்து இருக்கிறது. ரஹானே அவுட் ஆன பின் இன்று மயங்க் அகர்வால் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக பண்ட் களமிறங்கினார்.
ஏன்
புஜாரா வலதுகை பேட்ஸ்மேன், பண்ட் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் பண்ட் பேட்டிங் ஆர்டரில் முன்பே களமிறங்கினார். மைதானத்தில் இடது வலது காம்பினேஷன் இருக்க வேண்டும் என்பதால் பண்டை முன்பே களமிறக்கி உள்ளார் ரஹானே. இது இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவியது குறிப்பிடத்தக்கது.
உதவியது
இடது வலது காம்பினேஷன் ஆடியதால் ஆஸ்திரேலிய பவுலர்கள் மாறி மாறி பவுலிங் செய்தனர். இன்னொரு பக்கம் பீல்டர்கள் ஒவ்வொருமுறையும் 90 யார்டு மைதானத்தில் மாறி மாறி நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சோர்ந்து போக தொடங்கினார்கள். பவுலர்களும் மாற்றி மாற்றி பவுலிங் செய்து சோர்ந்து போனார்கள். மைதானத்தில் சுத்தி சுத்தி பீல்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் வந்துள்ளனர்.
சோர்வு
இது நான்காவது நாளின் கடைசி செஷன் ஆகும். இப்படிப்பட்ட நிலையில் பேட்ஸ்மேன்கள் மாறும் போது பீல்டிங்கும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியை இந்த திட்டம் பெரிய அளவில் சோர்விற்கு உள்ளாக்கி உள்ளது.