இங்கிலாந்து திணறல்
இந்தியா -இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அதற்குள்ளாக 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறி வருகிறது. 100 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
அக்சர் படேல் 4 விக்கெட்டுகள்
இந்த போட்டியில் அக்சர் படேல் மற்றும் ரவி அஸ்வின் ஆகியோர் ஹீரோக்களாக உள்ளனர். அக்சர் படேல் 4 விக்கெட்டுகளையும் ரவி அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதன்மூலம் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பாதையில் சிறப்பாக தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
400 ரன்கள் சாதனை
ஸ்பின்னர் ரவி அஸ்வின் இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதன்மூலம் 397 விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார். அவர் கேப்டன் ஜோ ரூட், ஜாக் லீச் மற்றும் ஓலி போப் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் தனது 400 விக்கெட்டுகள் சாதனையை அவர் இந்த போட்டியிலேயே மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.
டாம் சிப்லி டக்-அவுட்
இந்த போட்டியின்மூலம் தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடியுள்ள இஷாந்த் சர்மாவும் இங்கிலாந்து துவக்க வீரர் டாம் சிப்லியின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சிப்லி டக் அவுட் ஆகியுள்ளார். அவரது கேட்ச்சை ரோகித் சர்மா சிறப்பாக பிடித்துள்ளார்.