சென்னை :இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் 329 ரன்களை இந்தியா அடித்துள்ள நிலையில், தற்போது தனது முதல் இன்னிங்சை ஆடிவரும் இங்கிலாந்து அணி, 6 விக்கெட்டுகளுக்கு 87 ரன்களை அடித்துள்ளது.
இந்த போட்டியின்மூலம் தனது அறிமுக போட்டியில் களமிறங்கியுள்ள அக்சர் படேல் முக்கியமான ஜோ ரூட்டின் விக்கெட்டை சொற்ப ரன்களில் வீழ்த்தியுள்ளார்.
இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 87 ரன்களை அடித்துள்ளது.
இந்த போட்டியின்மூலம் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளார் அக்சர் படேல். தனது அறிமுக போட்டியிலேயே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை வெறும் 6 ரன்களில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2 இரட்டை சதம் மற்றும் ஒரு சதத்தை அடித்துள்ள ஜோ ரூட் இந்த போட்டியில் சொதப்பியுள்ளார்.