பெங்களூர் : இந்திய அணி தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் உட்பட, சமீப காலமாக ஸ்லிப் கேட்ச்களை அதிகளவில் தவற விட்டு வருகிறது. இது குறித்து, அசாருதீன் பேசியுள்ளார்.
ஸ்லிப் திசையில் நிற்கும் வீரர்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும், அவர்கள் எப்படி பயிற்சி செய்ய வேண்டும் உள்ளிட்ட யோசனைகளை கூறி உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்ய பல அணிகளும் தற்போது தடுமாறி வருகின்றன. இது குறித்து கூறியபோது, “பந்து திசை மாற்றி வரும் போது பெரும்பாலான அணிகள் தடுமாறுகின்றன. இதற்கு காரணம், குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச்களில் ஆடுவதுதான். நீங்கள் பந்து அதிகம் நகரும் பிட்ச்களில், அதிகம் விளையாட வேண்டும். அதனால் மட்டுமே அதில் முன்னேற முடியும்” என்றார்.
மேலும், விராத் கோலி, புஜாராவை விடுத்தது, ராகுலை அணியில் சேர்த்தது சரியான முடிவுதான் என தெரிவித்துள்ளார். புஜாரா கவுன்டி கிரிக்கெட்டில் ஆடினாலும், அதிக ரன் சேர்க்கவில்லை. அதே போல, அவர் வெளிநாடுகளில் தடுமாறி வருகிறார் என கூறினார்.
அவரது காலத்தில் அசாருதீன் ஒரு அட்டகாசமான பீல்டராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.