எப்படி
தமிழ்நாடு அணியில் ஆடி வரும் பாபா அபராஜித் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். பவுலிங், பேட்டிங் இரண்டிலும் அதிரடியாக இவர் ஆடி வருகிறார். ஓன் டவுன் பேட்ஸ்மேனாக இறங்கும் இவர் சராசரியாக 40+ ரன்களை எடுக்கிறார். ஆட்டத்தின் கடைசி வரை ஆடி அணியை வெற்றியை நோக்கி கொண்டு செல்கிறார்.
பவுலிங்
அதேபோல் பவுலிங்கிலும் பாபா அபராஜித் கவனம் ஈர்த்துள்ளார் . பேட்டிங் மட்டுமின்றி ரைட் ஆர்ம் ஆப் பிரேக் பவுலிங்கும் போடுவதில் இவர் வல்லவர். இந்த சீசனில் இவர் சராசரியாக 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை கொடுத்துள்ளார். சராசரியாக 2-3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
விக்கெட்
இதன் மூலம் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் பாபா அபராஜித் சிறப்பாக ஆடி வருகிறார். நேற்று நடந்த போட்டியிலும் 45 பந்தில் 52 ரன்கள் எடுத்து தமிழக அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். ஆனால் இவர் ஐபிஎல் போட்டிகளில் பெரிய அளவில் வாய்ப்பு பெறவில்லை.
வாய்ப்பு இல்லை
சிஎஸ்கே, புனே அணியால் இதற்கு முன்பு ஏலம் எடுக்கப்பட்டார் பாபா அபராஜித். ஆனால் அவருக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சீசனில் இவருக்கு எந்த அணியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தும் கூட இவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
மறுப்பு
இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் இவர் கவனம் பெற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக மீண்டும் சிஎஸ்கே அணியால் இவர் ஏலம் எடுக்கப்படலாம். கொல்கத்தா அணியும் இவரை குறி வைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.